Sunday 9 October 2022

பயிற்றுவாய் அவர்தமையே!


தண்ணளியே மின் ஒளியாய்

  தாரணிக்குத் தந்துதவும்

விண்ணளியே நீள் விசும்பின்

  வான்மழைபோல் வரந்தரவே

கண்ணளியைக் கண் காட்ட

  கலங்குவார் கருத்துநிறை

பண்ணளியாய் வந்தமர்ந்து

  பயிற்றுவாய் அவர்தமையே

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

தண்ணளியே - கருணை மிகுதியே

மின் ஒளியாய் - மின்னும் சூரியஒளியாய்

தாரணிக்கு - உலகிற்கு

விண்ணளியே - விண்ணின் அருளே

நீள் விசும்பின் - பெரிய மேகத்தின்

கண்ணளியை - கண்ணின் அருளைக்

கலங்குவார் - அருளுக்காக ஏங்குவார்

கருத்துநிறை - எண்ணத்தில் நிறைந்து

பண்ணளியாய் - பண்பாடும் வண்டாய் [தேனியாய்]

பயிற்றுவாய் - ஆனந்த தேனாகிய முத்தியின்பத்தைக் கற்பிப்பாய். 

No comments:

Post a Comment