Saturday 29 October 2022

ஏழையர் நெஞ்சின் எந்திழையாள்


ஆரணம் போற்றிடும் ஆரணியாள் - அவள்

  நாரணன் நம்பி சோதரியாள்

காரணம் காரியம் தானறிவாள் - நல்ல

  காரியம் யாவிலும் கைதருவாள்

பூரணப் பொற்குடம் ஏந்திடுவாள் - உயர்

  பொன்மலைப் பிறந்த பார்வதியாள்

ஏரண நூலின் நுட்பொருளாள் - இங்கு

  ஏழையர் நெஞ்சின் ஏந்திழையாள்

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

ஆரணம் - வேதங்கள்

பூரணம் - நிறைந்த

பொன்மலை - இமயமலை

ஏரணம் நூல் - தர்க்க நூல்

நுட்பொருளாள் - நுட்பமான கருத்தாவாள்

ஏந்திழையாள் - உயர்ந்த சிறப்புகளுக்கு காரணமாக விளங்குபவள்

No comments:

Post a Comment