Saturday 6 November 2021

மாநிலம் காத்திட வாராய்!


ஊன் உருகும் ஓசை கேட்குதா

உணர்வினில் ஒன்றியே நிதம்

வான் உருகி மழை வீழினும்

வன்னிலம் எங்கனும் வெய்ய

கான் உருகி கனல் காய்ந்தெரி

கானல் ஆவது காணலையா

மான் உருவ வள்ளி மணாளா

மாநிலம் காத்திட வாராய்!

இனிதே,

தமிழரசி.



No comments:

Post a Comment