Friday 3 January 2020

களித்திங்கு வந்து இருப்பாயினி!



நாராயணி என்னும் பூவாரணி
நளினமலர் நயனப் பாராயணி
வாராயினி வரந் தாராயோநீ
வண்ணமலர் அமர் வரதாயிணி
ஏராரணி மனத் தமராயோநீ
எண்ணதுள் புகுந் தருளாயோநீ
காராயணி கருணை பொழியாயோநீ
களித்திங்கு வந்து இருப்பாயினி
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. சிறப்பு

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    ReplyDelete