Wednesday 21 August 2019

நீரும் நிலமும் வசமானால்



இலைகள் கூறும் கதைகேளு
மலர்கள் காட்டும் நிறம்பாரு

வாவி தோரும் அலையடிக்கும்
வானின் தோற்றம் அதில்தெரியும்

நீரும் நிலமும் வசமானால்
நீணில மெங்கும் வளமாகும்

இயற்கை சொல்லும் பேரறிவை
எளிதில் படிக்க முடியாது

இயற்கையை இரசித்து வாழ்ந்திடின்
இன்பங்கள் யாவும் எமதாகும்

மயனே! இயற்கை உன்சொத்து
இயற்கையின் நாதம் இறையாகும்

இயற்கை இறையை உள்வாங்கி
இன்ப உணர்வில் கரைத்திடெடா!

இயற்கை வாழ்வின் நெறிநடந்து
வையம் வாழ வழிகாட்டு!

இனிதே,
தமிழரசி.
20/07/19

குறிப்பு:
பேரன் மயனுக்கு மலர்கள், மரஞ்செடி கொடிகள் என்றால் உயிர். அதனால் அவனுக்காக எழுதியது.

1 comment: