ஓங்கரனே யென்றும் எமதன்பனே
ஓயாதே எம்மிதையத் துடிப்பானாயே
வாங்காரும் கலையுடுக்கும் வடிவேற்கு மூத்தோனே
வேண்டியவை வேண்டமுன் வழங்கும் கரத்தோனே
தாங்காரும் துன்பங்கள் தகர்த்து எறிவோனே
தண்ணளியுந் தன்னிறைவும் பெருக்கும் தகையோனே
பாங்காரும் மோனநிலைப் பக்குவம் பகர்வாய்
பைந்தமிழை பண்ணோடு பாடுவோர்க்கே
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
ஓங்காரன் - ஓங்கார வடிவுவான பிள்ளையார்
ஓயாதே - இடைவிடாது
வாங்காரும் - விலைமதிக்க முடியாத
கலை - உடை
வடிவேல் - முருகன்
வேண்டியவை - தேவையானவற்றை
வேண்டமுன் - கேட்கமுன்
வழங்கும் - கொடுக்கும்
கரம் - கை
தாங்காரும் - தாங்கமுடியாத
தகர்த்து - உடைத்து
தண்ணளி - கருணை
தன்னிறைவு - மனநிறைவு/எல்லாவற்றுக்கும் ஆசைப்படாத தன்மை
தகையோன் - தன்னையுள்ளவன்/இயல்புடையவன்
பாங்காரும் - பக்குவம் நிறைந்த
மோனநிலை - மௌனநிலை
பக்குவம் - ஆற்றல்
பகர்வாய் - சொல்வாய்
No comments:
Post a Comment