Sunday 19 November 2023

எம்மை மகிழ்ந்தணைப்பாய்!



கந்தன் என்பார் உன்னைக் கடம்பன் என்பார்
            காலமெலா முன்னைக் கை தொழுவார்
எந்தை என்பார் முன்னை எழுச்சி என்பார்
            ஏக்கமோ டுன்னைப் பார்த்து நிற்பார்
சிந்தை என்பார் முன்னைச் சிவனும் என்பார்
            சித்தத்தே யுன்னை சுவைத் திருப்பார்
முந்தை என்பார் முன்னை முதல்வன் என்பார்
            மூர்க்கராம் எம்மை மகிழ்ந் தணைப்பாய்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment