Thursday 9 December 2021

வேறென்ன வேண்டுவனே



ஆலைப் பட்டுழல் கரும்பாய்

  அலை பட்டேன் நன்றே

சூலை வாய்செங் கல்லாய்

  சிவந்ததே யென் நெஞ்சே

காலைக் குயில்போற் கூவியே

  காதலால் கசிவ தல்லால்

வேலைக் கையுடை வேலனே

  வேறென்ன வேண்டு வனே

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment