Saturday 14 September 2019

மண்ணின் மைந்தர் மறக்கலாமோ!



பண்ணின் இசையை பூவின் எழிலை
விண்ணின் மதியை வீழும் புனலை
திண்ணின் திடத்தை தெய்வ வடிவடிவை
கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
பெண்ணின் பரிவை பெருமைச் செறிவை
எண்ணின் எழுத்தை ஏழைச் சிரிப்பை
தண்ணின் குளிரை தாயின் மனத்தை
மண்ணின் மைந்தர் மறக்கலாமோ!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment