நல்லைக் கந்தன் நயனம் கண்டேன்
நாளும் எம்மை நயத்தல் கண்டேன்
முல்லை முறுவல் முகமும் கண்டேன்
மாளும் எம்மை முகத்தல் கண்டேன்
தொல்லை தவிர்த்து ஆள்தல் கண்டேன்
தாழும் எம்மை தாங்கல் கண்டேன்
எல்லை இல்லா இன்பம் கண்டேன்
ஏழை எமக்கு அருளல் கண்டேன்
வல்லை வந்த வடிவேல் கண்டேன்
வாழ்வாய் எம்முள் வாழ்தல் கண்டேன்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
நயனம் - கண்
நயத்தல் - விரும்புதல்
முறுவல் - சிரிப்பு
மாளும் - அழியும்
முகத்தல் - அளந்துபார்த்தல்/சோதனை செய்தல்
தொல்லை - துன்பம்
தவிர்த்து - நீக்கி
ஆள்தல் - தன்னுடையதாகக் கையாளுதல்
தாழும் - தாழ்வடையும்
வல்லை - விரைந்து
வாழ்வாய் - உயிராய்
No comments:
Post a Comment