களி வண்டாய் வலம் வந்தேன்
விண்ணழகு மிளிரும் முகம் பார்த்தே
விரை கழல் தொழுது நின்றேன்
பெண்ணழகு பேசி பொழுது கழித்தே
பண் ணழகு பாடல் சமைத்தேன்
ஒண்ணழகு இடை ஒடிய நடந்தே
ஒண் தமிழை ஓதி வாராய்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
களி கொண்டே - மகிழ்ந்தே
களி வண்டாய் - தேனருந்திய வண்டாய்
மிளிரும் - துலங்கும்/ஒளிவீசும்
விரை கழல் - நறுமணம் கமலும் திருவடி
சமைத்தேன் - புனைந்தேன்/செய்தேன்
ஒண்ணழகு - இயற்கையழகு
இடைஒடிய - இடையே அறுதல்/வளைதல்
ஒண்தமிழை - இயற்தமிழை
ஓதி - சொல்லுதல்