Monday 1 July 2024

உன்றன் அறிவு எனதாகுமா

மனமே உன்றன் மலர்க் கோயில்

            மனத்தே வைத்து மகிழ்ந் திருந்தே

சினமே கொள்ளா சிந்தைய ளாகி

            சித்தத்தே நின்னை சிறை வைத்தே

கனமே பண்ணி கை தொழுதே

            கழல் கண்டு கரைந்தே மா

உனமே யாய் உன்னை அறிவனோ

            உன்றன் அறிவு எனதாகுமா

இனிதே,

தமிழரசி.

சொல் விளக்கம்:

சினம் - கடுங்கோபம்

சிந்தை - எண்ணம்

சித்தம் - உள்ளம்

கனம்பண்ணுதல் - மதித்தல்

கழல் - திருவடி

கரைந்தே - உள்ளம் நெகிழ்ந்தே

உனம் - ஆழ்ந்து சிந்தித்தல்

மாஉனமேயாய் - மௌனமேயாய் [நீளநினைத்தலால் மௌனமாதல்]

உன்றன் அறிவு - பேரறிவு