வயலூர் முருகன்
நறுமணங் கமழ்கடம்ப மலர்த்தார் அணிந்தான்
நற்றமிழ் வல்லோர் நல்மார்ப மர்ந்தான்
குறுநகை காட்டி கழல்தொழும் அடியவரை
காத்திடுவான் கந்தன் என்றார் கணவந்தேன்
அறுமுகனே ஊனுடலுருகி ஆருயிர் பிரியினும்
அந்தமில் செந்தமிழ் அருவியாய் சொரிந்து
நறுந்தமிழ் பாமாலை நயந்திட வாராய்
நானிலம் வாழ நல்லருள் தாராய்
இனிதே,
தமிழரசி.