Saturday, 6 February 2021

இதயவாசல் திறப்ப தெப்போ?

இயற்கை தன்னை தினமழித்து

            ஏதுகண்டோம் நா மிப்போ

செயற்கை ஆகப் பலவடித்தும்

            செயற்றிறனை இழந்து இப்போ

மயற்கை கொண்ட மானுடமும்

            மதிமயங்கிக் கலங்கு திப்போ

இயற்கை எனும் எழில்காண

            இதயவாசல் திறப்ப தெப்போ

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

மயற்கை - மயக்கம்

மானுடம் - மனிதர்

No comments:

Post a Comment