அவமே நாளைக் கழித்துகந்து
ஆங்காரத்துள் ஒளித்திருந்தே
பவமே புணரும் காரணத்தால்
பாவப்புனையுள் வீழ்ந்திருந்தேன்
தவமே அறியாத் தடுமாறி
தானெனஎண்ணி மகிழ்ந்திருந்தே
சிவமே உணராச் சிந்தையதாய்
சோர்ந்தெனதுள்ளம் மாண்டதுவே!
No comments:
Post a Comment