நாயகியாம் கண்ணகி அருள்பாய
துள்ளிவரும் அலையும் துதிபாட
தெண்டனிட்டு அடியார் கவிபாட
தெள்ளுதமிழ் இசையை செவிமடுத்து
தேந்தோம் என்று நடமாடி
கள்ளியாற்றின் மிசை படகுவிட்டு
கலைபல பயின்றே களித்திருப்போம்
குறிப்பு:
இவ்வருடம் வெளியிட இருக்கும் புங்குடுதீவு பற்றிய நூலில் 'கள்ளி ஆற்றங்கரைக் கலையரங்கு' என்னும் தலைப்பின் கீழ் புங்குடுதீவின் பண்டைய கலையரங்கம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கலாம்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment