Wednesday 27 January 2016

தாவியேற நின்ற மரம் பாரீர்!


சின்ன மரம் பெரிய மரம் எந்த மரம் என்ன
சிறுவர் நாம் கூடியேற சிறந்த மரம் என்ன
இன்ன மரம் நல்ல மரம் இந்த மரம் என்று
இங்கு மங்கும் ஓடியாடி தேடு மரம் என்ன
உன்ன நல்ல ஒதிய மரம் உந்த மரம் என்று
ஓங்கி வளர் காட்டினிடை பார்த்த மரம் என்ன
வன்ன மரம் வளையு மரம் அந்த மரம் என்று
வடிவாகத் தாவியேற நின்ற மரம் பாரீர்!
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு  108

No comments:

Post a Comment